செவ்வாய், 30 மார்ச், 2010

*சிக்கன் குழம்பு*

"தேவையான பொருட்கள்"
22=கோழி அரை அல்லது ஓரு கிலோ
1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )

5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்
16=கறிமசால் இரண்டு ஸ்பூன்
17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை

மாசல் அரைக்க = முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்

அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும்

"செய்முறை"
அடுப்பை பற்றவைத்து குக்கரை வைக்கவும் காய்ந்ததும் மூன்று கரண்டி என்னை ஊற்றவும் (தேவைக்கு ஏர்ப கூட்டவும் குறைக்கவும் )என்னை காய்ந்ததும் கடுகு+உளுந்து+கடலைபருப்பு போட்டு சிவந்ததும் வெங்காயம் கரிவேபிலை போடவும் ,பிறகு மிளகாய் தூள் ,கறிமசால் போடவும் வசம் போனதும் தக்காளி போடவும் பிறகு கழுவி வடித்த சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சேர்கவும் விளகெண்ணை அரை ஸ்பூன் ஊற்றவும் நன்றாக வதங்கி டிரை ஆனதும் அரைத்த மசால் ஊற்றவும் தேவைக்கு ஏர்ப தண்ணீர் ஊற்றவும் குக்கரை மூடி விசில் போட்டு விடவும் (பாய்லர் கோழி என்றால் இரண்டு விசில் போதும் )
நாட்டு கோழி என்றால் ஐந்து விசில் )நாட்டு கோழி சுவையாய் இருக்கும் குழம்புக்கு )குழம்பு ரெடி
குழம்பு தண்ணியாகவும் இருக்க கூடாது ரொம்ப கெட்டியாகவும் இருக்க கூடாது .சாம்பார் போல் நாடு தரமா இருக்கனும்
இடிலிகும் பூரிக்கும் நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக